என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இலவச வீட்டுமனை பட்டா"
- அமுலு விஜயன் எம்.எல்.ஏ. வழங்கினார்
- ஆக்கிரப்பு செய்யப்பட்டிருந்த 250-க்கும் மேற்பட்ட வீடுகள் அதிகாரிகள் அகற்றினர்
குடியாத்தம்:
குடியாத்தத்தில் 90 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை குடியாத்தம் எம்.எல்.ஏ. அமுலுவிஜயன் வழங்கினார்
வேலூர் மாவட்டம், குடியாத்தம் கவுண்டன்யா மகாநதி ஆற்றின் கரையில் இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது. அதன்படி நெல்லூர்பேட்டை, பாவோடும்தோப்பு, என்.எஸ்.கே.நகர், கோபாலபுரம் மற்றும் சுண்ணாம்புப்பேட்டை ஆகிய பகுதிகளில் ஆற்றின் ஏரிக்கரையில் ஆக்கிரப்பு செய்யப்பட்டிருந்த சுமார் 250-க்கும் மேற்பட்ட வீடுகள் அதிகாரிகள் அகற்றினர்.
வீடுகளை இழந்த பொதுமக்கள் தங்கும் வசதி இன்றி கடும் அவதி அடைந்தனர். எனவே ஆக்கிரமிப்பு அகற்றத்தின்போது வீடுகளை இழந்தவர்களுக்கு, இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின், கவுண்டன்யா மகாநதி ஆற்றில் வீடுகளை இழந்த 252 பேருக்கும், 2-ம் கட்டமாக 57 பேருக்கும் ராமாலை ஊராட்சியில் வழங்கினார்.
இதனை தொடர்ந்து தற்போது 3-ம் கட்டமாக பங்கரிஷிகுப்பம் பகுதியில் 90 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க ப்பட்டது. இதற்காக நேற்று நடந்த நிகழ்ச்சிக்கு குடியாத்தம் உதவி கலெக்டர் எம்.வெங்கட்ராமன் தலைமை தாங்கினார்.
தாசில்தார் விஜயகுமார் முன்னிலை வகித்தார். துணைதாசில்தார் சுபிச்சந்தர் அனைவரையும் வரவேற்றார்.
குடியாத்தம் நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தர்ராஜன், குடியாத்தம் ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
சிறப்பு அழைப்பா ளராக குடியாத்தம் எம்.எல்.ஏ. அமலுவிஜயன் கலந்துகொண்டு 90 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கி பேசினார். முடிவில் வருவாய் ஆய்வாளர் பலராமபாஸ்கர் நன்றி கூறினார்.
- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி, தலைமையில் நடைபெற்றது.
- 20 இருளர் இன மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை மாவட்ட கலெக்டர் சாந்தி வழங்கினார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி, தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா மற்றும் சிட்டா பெயர் மாற்றம், பட்டா வேண்டுதல், புதிய குடும்ப அட்டை வேண்டுதல், வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட இதர உதவித் தொகைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், உதவி உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 423 மனுக்கள் வரப்பெற்றன.கடந்த 31.10.2022 அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தருமபுரி மாவட்ட கலெக்டரிடம் அரூர் வட்டம், வேப்பம்பட்டி தரப்பு, மாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த இருளர் இன மக்கள் தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வேண்டுமென கோரிக்கை மனு அளித்தார்.
இம்மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் அரூர் வருவாய் வட்டாட்சியரிடம் வழங்கி, அம்மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென உத்தர விட்டார்.
மாவட்ட கலெக்டர் உத்தர வின்படி, இம்மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, இன்றைய தினம் நடைபெற்ற இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், வேப்பம்பட்டி தரப்பு, மாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த தகுதியுள்ள 20 இருளர் இன மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை மாவட்ட கலெக்டர் சாந்தி வழங்கினார்.
இலவச வீட்டுமனை பட்டா வேண்டி மனுக்களை வழங்கிய 15 நாட்களுக்கு ள்ளாகவே, இக்குறுகிய காலத்தில் எங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கிய மாவட்ட கலெக்டருக்கு எங்களது நன்றியினை தெரிவித்து கொள்கிறோம் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்கள்.
மேலும், இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர், தருமபுரி மாவட்ட வருவாய் அலகு, காரிமங்கலம் வட்டம், பன்னிகுளம் கிராமத்தில் கிராம உதவியாளராக பணிபுரிந்து வந்த காளியப்பன் என்பவர் பணியிடையில் மரணமடைந்ததை முன்னிட்டு, அவரது வாரிசுதாரரான அவரது மகன் அரிதாஸ் என்பவருக்கு தருமபுரி வருவாய் கோட்ட அலுவலகத்தின் பதிவுறு எழுத்தர் பணியிடத்திற்கான பணிநியமன உத்தரவு ஆணையினையும் வழங்கினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்